districts

img

மறைந்த ஆர்.இளம்வழுதியின் முதலாமாண்டு நினைவுநாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் மறைந்த ஆர்.இளம்வழுதியின் முதலாமாண்டு நினைவுநாள் சனிக்கிழமையன்று (செப்.17) அணுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது நினைவு கல்வெட்ட அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.