விழுப்புரம்,ஏப்.28- நெல் உற்பத்தியில் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கனிசமான உற்பத்தி செய்யும் மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறந்து குவின்டால் ஒன்று ரூ. 2700 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் விவ சாய சங்க பிரதிதிநிதிகள், விவ சாயிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் பேசுகையில்,“ வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து, விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க 1.5 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கியது, தில்லியில் விவ சாயிகள் போராடியபோது அவர்க ளுககு ஆதரவு தெரிவித்தும் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றியதையும் பாராட்டினார். நந்தன் கால்வாய் திட்டம் தொடர்ந்து பேசிய முருகன், “விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமான ஏரிகளுக்கு நீர்நிரப்பி விவசாயிகள் பயன்பெறுகிற மிகப்பெரிய திட்டம் நந்தன் கால்வாய்த்திட்டம். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் ஒரளவு முடிவு பெற்று பண மலை ஏரிக்கு இந்த ஆண்டு நீர் வந்தது மகிழ்ச்சியானது. இருப்பினும் மாவட்டத்திலிலுள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பும் விதத்தில் ஏரிகளை இணைக்கின்ற வாய்க்கால்களை சீரமைத்திடும் விதத்திலும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடும் விதத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். கரும்பு விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றிடும் வகையில், டன் ஒன்றுக்கு ரூ.5000 விலை வழங்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் தனி யார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசே பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். குறித்த காலத்தில் பயிர் இழப்பீடு வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். ஏரிகளை புனரமைக்க வேண்டும், வரத்து வாய்க்கால்களை சீரமைக்கவேண்டும், போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கடந்த காலத்தில் குடிமரமாத்து பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விவ சாயிகளுக்கு குறைந்த இழப்பீடே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அய்யன்தோப்பு, மேல்பாக்கம், ஊரல், பட்டினம், மேல்மா விளங்கை, கீழ்மா விளங்கை, வெள்ளி மேடுபேட்டை உள்ளிட்ட பாதிக்கப் பட்ட கிராமங்களின் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் 10 மடங்கு உயர்த்த வழங்க வேண்டும் கனிம வளங்கள் அரசு விதிமுறை களை மீறி கொள்ளையடிக்கப்படு கிறது. அரசு விதிமுறைகளை ஒப்பந்த காரர் மீறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மரக்காணம், திண்டிவனம் வட்டங்களில் பெருமளவு முறைகேடு நடைபெறுகிறது. மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டு, சாலை கிராம ஏரிகளில் மண்கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நடவடிக்கை இல்லை. எனவே முதல்வர் தலை யிட்டு கனிம வளக்கொள்ளை சம்மந்தமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் அலைகழிக்கப்படுவதும், நியாய மான விலை கிடைக்காமல் ஏமாற்றப்படு வதும் தவிர்க்கும் வகையில் வெளி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்த வேண்டும். சுகாதார வசதி மேம்படுத்தி வேண்டும். தென்பெண்ணையாற்றில் இரண்டு இடங்களில் உள்ள எல்லிஸ் சத்திரம் தடுப்பணை, தளவானூர் தடுப்பணை உள்ளிட்டவற்றை உடனடியாக விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பருவ மழைக்குள் கட்டி முடித்திடும் விதத்தில் பணிகளை துவக்க வேண்டும். மாவட்டத்தில் யூடிஆர் திருத்தம் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் மனுக்கள் ஆறு மாதத்திற்கும் மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் அலைகழிப்பது தவிர்த்திடும் விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருக் கிறார்.