சென்னை.மே 22- எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடங்கள், நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பார்சல் கொண்டு செல்வதற்கான மேம்பாலம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரமாண்ட நுழைவு வாயில் சென்னையின் 2வது பெரிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தை உலகத்தரத்துடன் நவீன மயமாக்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. ரூ.760 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் விரை வில் தொடங்க உள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் 2வது நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த 2வது நுழைவு வாயில் பிரதான நுழைவு வாயிலாக தெற்கு ரயில்வே மறு வடிவமைக்க உள்ளது. ரயில் நிலையத்தில் புதிய கட்டி டங்கள், நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பார்சல் கொண்டு செல்வதற்கான மேம்பாலம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை நுழைவு வாயில் மற்றும் காந்தி இர்வின் ரோடு நுழைவு வாயில் வருகை மற்றும் புறப்பாடுகளை கையாள தனி கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது. 2 நுழைவு வாயில்களிலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. தினமும் சுமார் 1.5 லட்சம் பயணி களை கையாளும் இந்த ரயில் நிலை யம் மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பேருந்துகள் உள்ளடக்கிய ஒரு பெரிய மல்டி மாடல் மையமாக உருவாகிறது. 2வது நுழைவு வாயிலில் நவீன கட்டிடம் கட்டப்படுகிறது. இது மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டு பல வசதிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதன் அருகில் உள்ள காலி யிடங்களில் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கும் நிறுவனம் 2 ஆண்டுகளில் ரயில் நிலை யத்தை புதுப்பிக்கும் பணிகளை முடித்து கொடுத்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி களை மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலை யத்தின் சீரமைப்புப் பணிகளை வருகிற 26ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்தில் அடுத்த 40 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகை யிலான வசதிகள் உலகத்தரத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. ரயில் நிலை யத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் விதமாக தனித்தனி வருகை, புறப்பாடு வாயில்கள், ரயில் நிலைய கட்டடங்கள், நடைமேடை, பரப்பளவுகள், சுற்றி யுள்ள பகுதிகள் ஆகியவை உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.மாற்றுத் திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாக, சாய்வு தளங்கள், நகரும் படிகட்டுகள், மின் தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காந்தி இர்வின் சாலை பகுதியில் 4 தளங்களைக் கொண்ட கட்டிடம் அமையவுள்ளது. இதில் தரை தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் பெறும் மையம், முதல் தளத்தில் அலுவலர்கள், காத்திருப்பு அறை, இரண்டாம் தளத்தில் வணிக வளாகங்கள், மூன்றாம் தளத்தில் வர்த்தக அலுவலகங்கள், ஓய்வு அறைகள், உணவகங்கள் ஆகியவை அமையவுள்ளன. பூந்தமல்லி சாலை பகுதியில் ஆறு மாடி கட்டிடம் அமைகிறது. தரைத்தளம் முதல் தளத்தில் வணிக அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் 100 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மூன்றாம் , நான்காம் தளத்தில் தலா 200 கார்கள் வீதம் 400 கார்கள் நிறுத்துமிடம் 5வது தளத்தில் அலுவலகங்கள் அமைகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தின் இருபுறமும் பன்னடுக்கு கட்டிடம் ஒன்றும் அமையவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 3.67 லட்சம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.