districts

img

காத்திருப்பு போராட்டம் எதிரொலி சாராட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

கிருஷ்ணகிரி,மே.24-

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் மத்திகிரியில் தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து தற்போது மறுத்து வரும் உத்தனப்பள்ளி மாற்று சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஓசூர், தேன்கனிக்கோட்டை காவல் நிலையங்களில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    1907ஆம் ஆண்டு முதல் மிடுகரப் பள்ளிக்கு செல்லும் வண்டி பாதை தார் சாலை யாகமாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இந்த சாலையை மாற்றி அருகில் உள்ள பஞ்சமி நிலத்தில் புதிதாக சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

   சென்னசந்திரம், சானம்மாவு உட்பட 84 தலித் குடும்பங்களுக்கு 20 ஆண்டு களுக்கு முன்பு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் இடம் மட்டும் இன்னும் ஒப்பக்கப்படவில்லை. இது குறித்த வழக்கில், தலித் மக்களுக்கு ஆதர வாக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், ஆதிதிராவிடர் நலத்துறை உரிய நடவடிக்கை  எடுத்து தலித் மக்களுக்கு நிலத்தை ஒப்படைக்க சாராட்சியர் தலையிட வலியுறுத்தி மத்திகிரி யில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.

    கோரிக்கை மனு அளிப்பது குறித்து சாராட்சியரிடம் நாட்களுக்கு முன்பே தகவல் கொடுத்து அனுமதியும் பெறப் பட்டது. ஆனாலும், மனுவை பெற்றுக் கொள்ள சாராட்சியர் அலுவலகத்தில் இல்லை. இதனால் கோபமடைந்த  பாதிக்கப்பட்ட மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் ஓசூர் சாராட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   பிறகு போராட்டக் களத்திற்கு வந்த சாராட்சியர் மனுவை பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட தலித் பெண்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஓசூர் காவல் துறைக்கு ஆணையிட்டார்.      

      மத்திகிரி சுடுகாட்டிற்கு தார் சாலை அமைத்து கொடுக்க உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    மிடுகரப்பள்ளிக்கு செல்லும் தார் சாலையை விவகாரத்தில் மேல் முறையீடு செய்வது, அதுவரை தார் சாலை மாற்றாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்து வதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக் களுக்கான இடம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

   தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, தலைவர் ஆனந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி. ஜெயராமன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர். ஜெயராமன், ஒற்றுமை மேடை நிர்வாகி சேதுமாதவன், சுரேஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஜெயந்தி, ஸ்ரீதர், சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.