districts

img

இடிக்கப்பட்ட துணை  சுகாதார மையத்தை உடனடியாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சியில் இடிக்கப்பட்ட துணை  சுகாதார மையத்தை உடனடியாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ரயில்வே இருப்புப் பாதை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் வண்டலூர் கிளை சார்பில் கிளை செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி, பகுதி குழு உறுப்பினர்கள் மணிவேல், சம்பத், அருளாளன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.