பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், இரண்டாவது நாளாக வியாழனன்றும் (பிப்.1) கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் எம்.ஆர்.பி செவிலியர்களும் பங்கேற்றனர்.