districts

img

இருளர் இன மாணவனுக்கு நியாயம் கிடைக்கும் வரை சிபிஎம் துணை நிற்கும்!

விழுப்புரம்,மே 11- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் சுந்தர் ராஜ். தன்னுடன் பள்ளி யில் படிக்கும் மாணவர் களால் எரியும் தீயில் தள்ளி விடப்பட்டு, உடல் முழு வதும் தீ காயமடைந்து திண்டி வனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ராஜேந் திரன், ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநிலக் குழு உறுப்பி னர் தமிழரசன், வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சதீஷ்குமார், சமூக ஆர்வலர் மணிவேலன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்ற னர். அங்கு மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  பிறகு செய்தியா ளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இது போன்று வன்கொடுமை சம்ப வங்கள் நடைபெற்று வரு வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாக மும், அரசும் காண்காணி ப்பை தீவிரப்படுத்த வேண் டும் என்றும் பாதிக்கப் பட்ட மாணவனுக்கு நியாயம் கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.