பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன், பொருளாளர் எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.