கிருஷ்ணகிரி,நவ.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 24 வது மாநாடு கிருஷ்ணகிரியில் செவ்வாயன்று ( நவ. 19) துவங்கியது. ஊத்தங்கரையில் இருந்து மாவட்டக் குழு உறுப்பினர் அண்ணா மலை தலைமையில் கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடிமரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் பெற்றுக்கொண்டார்.கந்து வட்டி,கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியதால் கொலை செய்யப்பட்ட ஆதித்ய வர்த்தனஸ்ரீ நினைவு ஜோதியை கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா எடுத்துவர, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி பெற்றுக் கொண்டார். தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி கொலை செய்யப்பட்ட ஓசூர் தியாகி சக்திவேல் நினைவு ஜோதியை மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் எடுத்துவர செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் பெற்றுக் கொண்டார். அஞ்செட்டில் இருந்து ஸ்ரீராமன் நினைவு ஜோதியை வட்ட செயலாளர் தேவராஜன் எடுத்து வர மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் பெற்றுக்கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,சி.பி. ஜெயராமன்,மாவட்ட குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி தலைமையில் மூத்த உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயராமன் மாநாட்டு கொடியேற்றினார். செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் அஞ்சலி உரையாற்ற, கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் ஜி.பெரியசாமி வர வேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், ஒன்றிய அரசு பெரும்பான்மை என்னும் பெய ரில் மத்திய பிரதேசம், உத்தரப்பிர தேசம்,உத்தரகாண்ட் மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் சிறுபான்மை மக்கள் வீடுகளை புல்டோ சர் மூலம் இடித்து தள்ளியுள்ளனர். 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நடுத் தெருவில் தவிக்கின்றனர்.மணிப்பூரில் சிறுபான்மை மக்கள்,ஏழை எளிய வர்கள் மீது அரசு கடுமையாக தாக்கு தல் தொடுத்து வருகிறது.அதை எதிர்த்து ஜனநாயகத்தை காத்திட மக்களும் கடுமையான போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தாமல் வேலை வாய்ப்பு குறித்து கேட்டால் அக்னிபாத் திட்டத்தில் வேலை செய்யுங்கள். அங்கு பணி முடிந்ததும் பாஜக,ஆர்எஸ்எஸ் சார்ந்த இயக்கங்களின் அலுவல கங்களில் காவல்காரர்களாக வேலை செய்யுங்கள் என்கின்றனர். இந்நிலையில் இங்கு தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ கத்தில் அரசு நிலத்தை ஒருங்கிணைத்து பெரும் முதலாளிகளுக்கு கொடுக்கும் நிலை ஏற்படும்.இந்த மக்கள் விரோத சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் வேலை மற்றும் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித் தார். பின்னர் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. புதன்கிழமை மாலை வரை நடைபெறும் மாநாட்டில் முக்கி யமான தீர்மானங்கள் நிறைவேற்றப் படவுள்ளன.