districts

சென்னை முக்கிய செய்திகள்

தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் முதலமைச்சர் நாளை திறக்கிறார்

சென்னை,மே 3- சென்னை தி.நகர் ரங்க நாதன் தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் வரை பாலத்தில் நடந்து செல்லும் வகையில் ஆகாய  நடைமேம்பாலம் கட்டப் பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் நகரும் படிக்கட்டு வசதிகளுடன் கூடிய இந்த ஆகாய நடை  மேம்பாலத்தின் (ஸ்கை வாக்) இருபுறமும் லிப்ட்  வசதிகளும் செய்யப்பட்டுள் ்ளது. 4 மீட்டர் அகலம் 600  மீட்டர் நீளத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த நடைமேம் பால பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இந்த நடை மேம்பாலத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளியன்று (மே 5) திறந்து வைக்க உள்ளார்.

ஊடக சுதந்திரத்தை முடக்கும் செயலுக்கு  எதிராக ஒன்றினைவோம் எம்.யூ.ஜெ

சென்னை,மே 3- உளவு பொருட்களால் ஊடக சுதந்தி ரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக  சென்னை பத்திரிகையாளர் யூனியன்  (எம்யூஜெ) கூறியுள்ளது. இதுகுறித்து   சங்கத்தின் தலைவர்  எல்.ஆர்.சங்கர், பொதுச்செயலாளர் வ. மணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கண்காணிப்பு - உளவு தொழில்நுட்பங்களை இந்தியா உட்பட உலகம் முழுவதும் அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.   இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  கண்காணிப்பு - உளவு மென்பொருட்க ளால் ஏற்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் கருப்பொருளாக, "மனித உரிமைகள் அனைத்துக்கும் செயல் ஊக்கியாக இருப்பது கருத்து சுதந்திரமே" என அறி விக்கப்பட்டுள்ளது.  பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 2021 ஆம் ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா, 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்துக்குச் சென்று விட்டது. இந்தியாவில் ஊடக சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.  எனவே, கருத்து சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் முடக்க முயற்சிக்கும் அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்; குடிமை (சிவில்) சமூ கத்துக்கு விழிப்புணர்வூட்டுவோம் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வேண்டுகோள் விடுக்கிறது.

போலி பாஸ்போர்டுடன் வாலிபர் கைது

போரூர்,மே 3- இலங்கையை சேர்ந்த வர் ராபின்சன் சார்லஸ் (43). இவர் விசா காலம் முடிந்தும் தொடர்ந்து வளசர வாக்கத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து ராபின்சன் சார்லசை கியூ பிரிவு போலீசார் கைது செய் தனர். அப்போது அவர் போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்று கனடா நாட்டுக்கு தப்பி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் போலியான முக வரியை கொண்டு வங்கி கணக்கு தொடங்கி இருப்ப தும், ஆதார் அட்டை, வாக் காளர் அட்டை, பான் அட்டை  மற்றும் 12-ம் வகுப்பு  சான்றிதழ் ஆகியவற்றை போலியாக வைத்திருந் ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

ரசாயன புகையால் மக்கள் அவதி

செங்குன்றம்,மே 3-  செங்குன்றம் அருகே உள்ள பாயாசம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் செவ்வாயன்று  அதிகாலை மழை பெய்து கொண்டிருந்த போது குடோனில் இருந்த ரசாயன பொருட்கள் மீது தண்ணீர் பட்டு புகை பரவியது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்  திணறலால் அவதிப்பட்ட னர். தகவல் அறிந்தது வந்த  தீயணைப்பு வீரர்கள் ரசாயன புகை வெளியேறு வதை கட்டுப்படுத்த முயன்ற னர். ஆனால் ரசாயனங்கள் தொடர்ந்து புகையாக மாறி வெளியேறியதால் அதனை உடனே கட்டுப்படுத்த முடிய வில்லை. பின்னர்  பல மணி நேரம் போராடி குடோனில் இருந்து ரசாயன புகை வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டது.

திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்

செங்கல்பட்டு,மே 3- செங்கல்பட்டு மாவட்டத் தில் திட்டமிடும் குழு உறுப்பி னர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்ட  ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட் சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் பெற்றுக் கொண்டார். வரைவு வாக் காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சி  அமைப்புகளின் உறுப்பினர் களின் பட்டியலின் அடிப் படையில் தயாரிக்கப்பட் டுள்ளது. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி-16, மாநக ராட்சி-70, நகராட்சிகள்-108, பேரூராட்சிகள்-99 என மொத்தம் 293 உள்ளது. மேலும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழனன்று (மே 4) வெளியிடப்படுகிறது.

கைப்பந்து போட்டியில்  அரிவாள் வெட்டு

பொன்னேரி,மே 3- பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பத்தில் மே தினத்தை முன்னிட்டு கைப்பந்து போட்டி கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினருனம் ஒருவரை  ஒருவர் தாக்கிக்கொண்ட னர். இதன்தொடர்ச்சியாக பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு   வந்திருந்த மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ், தீபக் ஆகியோருக்கு அரி வாள் வெட்டு விழுந்தது.

விமான கட்டணம் அதிகரிப்பு

சென்னை,மே 3- கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளதால் சென்னையில் இருந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் மற்ற  விமானங்களில் கட்டணம் உயர்த்தப் பட்டு உள்ளது. கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. இதனால் மே3 முதல் 5-ந் தேதி வரை கோ பர்ஸ்டின் அனைத்து விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித் துள்ளது.  இந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவ னம் கோ ஏர் விமானங்களை இயக்குகி றது. சென்னையில் இருந்து இந்த விமான நிறுவன விமானங்கள் மும்பை, கேரளா, அந்தமான் ஆகிய மாநிலத்திற்கு விமானங்களை இயக்கு கிறது. சென்னையில் இருந்து தினமும்  மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. இதேபோல் ‘கோ பர்ஸ்ட்’ விமானங் கள் செல்லும் மற்ற மாநிலங்களில் இருந்து அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கு விமான கட்டணத்தை மற்ற விமான நிறுவனங்கள் அதிரடியாக  உயர்த்தியுள்ளன.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

கடலூர், மே 3- தமிழ்நாட்டில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12 ஆண்டு களாக வழங்காமல் உள்ள மே மாத சம்பளத்தை வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டு களாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை மே மாதத்திற்கான சம்பளம் மறுக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறைக்கு அவர்களுக்கு சம்பளம் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரி விக்கப்பட்டுள்ளது.  ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் 181ஆவது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் சம்பளத்தை தான் அவர்கள் இப்போதும் பெறுகின்றனர். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மனிதாபிமானத்துடன் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில், பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூவாகத்தில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி, மே 3- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி செவ்வாயன்று(மே 2) மாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டு கொண்டும் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து விடிய, விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பாடல்களாக பாடி கும்மி அடித்தும் ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.  பிறகு, மே 3 அன்று தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதியின் சட்டமன்ற மணிக்கண்ணன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மே 5 ஆம் தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்திலிருந்து  ரூ.2.5 லட்சம் கொள்ளை

ஜோலார்பேட்டை, மே 3- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சுவிதா (42) இவர் புதன்கிழமை காலை 2.5 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக சந்தை கோடியூரில் உள்ள வங்கிக்கு வந்தார். பணத்தை அவரது மொபட் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார். சுவிதா படிவத்தை நிரப்புவதற்காக வங்கிக்குள் சென்றார். பின்னர் மொபட்டில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக வந்த போது, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, வங்கி முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர் மொபட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதை வைத்து காவல் துறையினர் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

ரயில் மோதி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி, மே 3- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், இறந்து போனவர் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும், தண்டவாளத்தை கடக்கும் போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம்

திருவண்ணாமலை, மே 3- திருவண்ணாமலையில் மே 4, 5 தேதிகளில் நடைபெற உள்ள சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு நகருக்குள் வருகை தரும் மக்களின் நலன் கருதி அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலைக்கல்லூரி மைதானம் வரையும் (பெரும்பாக்கம்) அத்தி யந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு) திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரையும் (பெரும்பாக்கம்) ஆகிய வழித்தடத்தில் ஆட்டோவில் செல்ல தனி நபர் கட்டணமாக ரூ.50 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்டவலம் தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு), மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு), அரசு கலைக்கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு), திண்டி வனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோவிலூர் ரோடு), திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு ஆறாவது குறுக்குத் தெரு வரை (அமோகா ஓட்டல்), நல்லவன் பாளையம் முதல் அங்காள பரமேஸ்வரி கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு), பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதுமிடம்), தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை ஆகிய வழித்தடத்தில் செல்ல தனிநபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது கிரிவலம் வரும் மக்களின் நலன் கருதி கட்டண மில்லா பேருந்து வசதி செய்யப் பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப் பாதைக்கு வரு வதற்கு திருவண்ணாமலை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க முன் வந்துள்ளனர். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூ லிப்பது தெரிய வந்தால் திரு வண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண் 04175 232266 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தவும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். மதுக் கடைகளுக்கு  2 நாள் விடுமுறை மே 4, 5 தேதிகளில் திரு வண்ணாமலை நகர பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் அரசு சில்லரை மதுபானக் கடைகள், நகரத்தில் இயங்கும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி மூடப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிறப்பு ரயில் மே 4, 5 தேதிகளில் வேலூரி லிருந்து திருவண்ணாமலைக்கு இரவு 9 மணிக்கும், திரு வண்ணாமலையிலிருந்து வேலூ ருக்கு மாலை 3.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது.

புதுவையில் பயிற்சி காவலர் மரணம்: விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை


புதுச்சேரி, மே 3- புதுச்சேரியில் பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: புதுச்சேரி சூரமங்கலம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி காவலர் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 11 மாதங்க ளாக கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். பயிற்சி முடிந்து அடுத்த மாதம் காவல் நிலைய பணிக்கு செல்ல வேண்டிய நிலையில், கடந்த 29ஆம் தேதி  10 கி.மீ. நடக்கும் பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பிறகு சக பயிற்சி காவலர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழை தலித் குடும்பத்தை சேர்ந்த விஜய் பல்வேறு கனவுகளுடன் ஆரோக்கிய மான உடல் நிலையுடன் காவலர் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்படி இருக்கும் போது கடந்த ஓராண்டு கால பயிற்சி அவரது உடல் நிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அவரது திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 1983ஆம் ஆண்டு முதல் செயல்படும் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் அரங்கேறி வரும் கொடுமைகள் குறித்தும், அதில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், அவ்வப்போது வெளிப்பட்ட போதும் அதுகுறித்து முழுமையான உரிய விசாரணை நடத்தவில்லை. கடந்த ஆண்டு கூட ஒரு பயிற்சி பள்ளியை சேர்ந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடை பெற்றுள்ளது. பயிற்சி காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் அடிமைபோல் நடத்துவதாகவும், இழிவாகப் பேசுவதாகவும் உண்மையைச் சொல்ல முடியாமல் இருக்க நேர்வ தாகவும் தரமான உணவு, சுகா தாரமான உள்கட்டமைப்பு, போது மான கழிவறைகள் போன்றவை இல்லாமல் இருப்பதாகவும். சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாகவும், சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைப்பது,

உடல் வலி, சோர்வு, மயக்கம் போன்ற உண்மையான வலி களைச் சொன்னாலும், தண்ட னையைக் குறைப்பதில்லை. இந்த பயிற்சியின் போது ஒரு முக்கிய மான பாடமாக மனித உரிமை பற்றி சொல்லிக் கொடுக்கும் அதி காரிகள் அதைக் கொஞ்சம் கூட நடை முறைப்படுத்துவதில்லை என்பதையே இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது. பல கனவுகளுடன் வரும் இளம் தளிர்களை கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாற்றி ஏழை எளிய மக்க ளுக்கு எதிரான மனநிலையோடு அதிகார வர்க்கத்தின் நலன்களை காப்பவர்களாக அவர்களைத் தயார் செய்து, வெளியில் அனுப்புகின்றனர். பிரெஞ்சு - ஆங்கிலேயர் காலத்தில் இந்திய - புதுச்சேரியைச் சேர்ந்த காவலர்களை இப்படி தயார் செய்த னர். ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகும் அதே பழைய காலனியாதிக்க விதி களின்படி தான் இப்போதும் காவல் அமைப்பு செயல்படுவதை ஏற்க முடியாது. எனவே பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவலர் பயிற்சியின் பயிற்று முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். பணிக்கு ஏற்ற பயிற்சிகள் மட்டும் அளிக்க வேண்டும். அங்கு தேவையான உள்கட்ட மைப்பு, தரமான உணவு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

கடலூர், மே 3- தமிழ்நாட்டில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12 ஆண்டு களாக வழங்காமல் உள்ள மே மாத சம்பளத்தை வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டு களாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை மே மாதத்திற்கான சம்பளம் மறுக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறைக்கு அவர்களுக்கு சம்பளம் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரி விக்கப்பட்டுள்ளது.  ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் 181ஆவது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் சம்பளத்தை தான் அவர்கள் இப்போதும் பெறுகின்றனர். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மனிதாபிமானத்துடன் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில், பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.