districts

img

மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, மே 14 -

    வில்லிவாக்கத்தில் சுமார் 62 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘மேயர் சிட்டிபாபு மேம்பால’த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.

    சென்னை கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதி  மக்கள் ரயில்வே சந்திப்பை (சந்திக்கடவு எண்.1) கடந்து  செல்ல வேண்டும். இந்த  சந்திப்பு அடிக்கடி மூடப்படு வதால் மக்கள் சிரமப்பட்ட னர். இதற்கு மாற்றாக, கொளத்தூர் பிரதான சாலையையும் - ஐசிஎப்  சாலையையும் இணைக் கும் வகையில் ரூ 61 .98  லட்சம்  செலவில் இருவழி  மேம்பாலம் அமைக்கப் பட்டது. இந்த பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம் பாலம்’ எனப் பெயர் சூட்டது.  இந்த பாலத்தை முதலமைச் சர் திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுத மபுரம் திட்டப்பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்ட 51 நபர்களுக்கு முதல மைச்சர் வீடு ஒதுக்கீட்டிற் கான ஆணைகளை வழங்கி னார்.

   இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம்கவி, ஏ. வெற்றிய ழகன், துணை மேயர் மு. மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.