விழுப்புரம், பிப்.20- ஏடிஎம் இயந்திரத்தில் கூடுத லாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை காவல் துறையினர் பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் அருகே ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ் (22)இரட்டையர்கள். இவர்கள் திண்டிவனம் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து 500 ரூபாய் எடுத்தனர். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ.10 ஆயிரம் வந்துள்ளது. ஆனால் யுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக மட்டுமே குறுந்தகவல் வந்தது. ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிகமாக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், கூடுதல் பணத்தை திண்டிவனம் நகர காவல் நிலைய ஆய்வாளர் கலைச் செல்வியிடம் ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர் களை காவல் துறையினர் பாராட்டி ரூ. 500 வெகுமதியாக அளித்த னர். இச்சம்பத்தை அறிந்த பொது மக்களும் அந்த சகோதரர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.