districts

img

காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களி டமே ஒப்படைக்க வேண்டும்

காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களி டமே ஒப்படைக்க வேண்டும், முழுநேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (மே 29) ரிப்பன் மாளிகையில், சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சித்ரகலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.கற்பகம், மாவட்டச் செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, பொருளாளர் கே.அன்னபூரணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.அந்தோணிசாமி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் ெஜ.பட்டாபி உள்ளிட்டோர் பேசினர்