districts

img

மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் பலி

அம்பத்தூர், அக். 17- ஆவடி அடுத்த சென்னீர்குப்பம் செல்வ கணபதி நகர் பகுதியில் வசிப்பவர் புவியரசன். இவரது மகன் சக்தி சரவணன் (8). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறு வனுக்கு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காய்ச்சல் சரியாகாததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதை யடுத்து சிறுவனை எழும்பூ ரில் உள்ள அரசு குழந்தை கள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சக்தி சரவணன் செவ்வாய்க் கிழமை அதிகாலை உயிரிழந்தார். சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழுமையான சுகாதார வசதிகள் ஏதும் செய்து தரப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதாலும், கழிவு நீர் தேங்கி நிற்பதா லும் கொசுக்கள் உற்பத்தி யாவதாகவும், அதன் மூலம் மர்மக் காய்ச்சல் ஏற்படு வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் வேறு யாருக்கா வது காய்ச்சல் உள்ளதா என மருத்துவர்கள் முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.