districts

பால்கனி இடிந்து விழுந்து ஒருவர் காயம்

சென்னை, மே 28-  

     மயிலாப்பூர் சிட்டி செண்டர் அருகே ராம்குமார் என்ப வருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான குடியிருப்பின் பால்கனி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

     இதனால் அந்தக் குடியிருப்பில் வசிக்கும் திரு நாவுக்கரசு (வயது 30) என்பவர் காயமடைந்தார். அவர் பால்கனியோடு முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் தீய ணைப்புத் துறையினர் காயமடைந்த திருநாவுக்கரசு என்பவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

    மேலும் பால்கனி இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த செல்வம் (வயது 55), ஆண்டாள் (வயது 78), ராஜேஸ்வரி (வயது 48), அட்சயா (வயது 26), 3 வயது ஆண் குழந்தை ஆகியோரை தீயணைப்பு துறையினர் ஏணியின் உதவியுடன் மீட்டனர். விபத்துக்கு உள்ளான குடி யிருப்பின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் படியும், குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் பகுதிகள் விழுந்தும் ஆபத்தான சூழலில் காணப்படு கிறது.