உளுந்தூர்பேட்டையில் 15 நாட்களாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது, வந்தவாசி சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. பிறகு, ஆட்டோவை வந்தவாசி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.