சென்னை,மார்ச் 18- சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே தினமும் 252 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 31 கி.மீ. அகல ரயில்பாதை கொண்ட 3-வது ரயில்பாதை திட்டம் கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது புறநகர் ரயில் சேவைக்கு பிரத்யேகமாக ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது. மேலும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. வழக்கமாக இந்திய ரயில்வேதான் இது போன்ற திட்டங்களை மேற்கொள்கிறது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புறநகர் பயணி களுக்கு தடையில்லாத பயண சேவையை வழங்கவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு ஆலோச கரை நியமிக்க விரைவில் டெண்டர் வெளி யிடப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டு களுக்குள் 4-வது ரயில் பாதையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதை அமைக்கப்பட்டவுடன் புறநகர் சேவைகளுக்காக 2 பிரத்தியேக ரயில்பாதைகள் இருக்கும். இதன்மூலம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் விடப்படும்.