சென்னை,ஜுன் 23-
சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றம் அருகே வியாழனன்று மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி யதால் விஷ்ணுராம் என்பவர் உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணம் செய்த திலீபன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்து போலீசார் சென்று விசாரணை நடத்தி னர். விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திலீபன் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இருவரும் தொழில் விஷயமாக சென்னை வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.