சென்னை, அக்.14- சென்னை தரமணியில் உள்ள ஐஐடி சென்னை ஆராய்ச்சி பூங்காவில் எம்பவர் 2022 என்ற தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு துவக்க நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான பிரிவின் தலைவர் சப்பல் கஸ்hபிஸ், சைபர் மீடியா குழுமத்தின் தலைவர் பிரதீப் குப்தா,பேராசிரியர் அசோக் ஜூன் ஜூன் வாலா ஆகியோர் உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தொழில்நுட்பத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியில ஈடுபட்டுள்ள மற்றும் முதல் முறையாக தொழில் முனைவேராக உள்ளவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான மாநாடாகவும் இது அமைந்திருந்தது.