மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
திருவண்ணாமலை, ஏப். 22- திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவி களை தினசரி அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் ஆசி ரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் தலைமை ஆசிரியை தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆசிரியர் லட்சு மணனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுவை மீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்வு
புதுச்சேரி, ஏப். 22- புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் 2009ஆம் ஆண்டு முதல் டீசல் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் பெட்ரோல் பங்குகளில் மீனவர்கள் டீசல் வாங்கினால் ரூ.10 வரை குறைந்த விலையில் டீசல் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை அரசு குறைத்தது. இதனால் மீனவர்களுக்கு கிடைக்கும் டீசல் மானியம் மிகவும் குறைந்து ரூ.4 மட்டுமே மானியமாகக் கிடைத்தது. இதனால் மீனவர்கள் போராட்டம் நடத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி, டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார். அதன்படி மீனவர்களுக்கு டீசல் மானியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளது. இனி லிட்டருக்கு ரூ.12க்கு மிகாமல் மானியம் கிடைக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் நுகர்வோர் பங்குகளில் டீசல் வாங்கும் போதே வாட் வரி ரூ.6.87 கழிக்கப்படும். மீதமுள்ள ரூ.5.13 மூன்று மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆண்டுக்கு வாட் வரி சலுகையாக ரூ.13.67 கோடியும், திரும்ப செலுத்தும் மானியமாக ரூ.10.35 கோடி என மொத்தம் ரூ.24 கோடி அரசுக்கு செல வாகும். இந்த அறிவிப்பு மீனவர்க ளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. யாருக்கு எவ்வளவு மானியம் ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி மீன்பி டிக்கும் விசைப்ப டகுக்கு நாள்தோ றும் 300 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 40 ஆயிரம் லிட்டர், தினசரி மீன் பிடிக்கும் விசை படகுக்கு நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 36 ஆயிரம் லிட்டர் வரை மானியம் பெறலாம்.
சிறைக் கைதி தப்பி ஓட்டம்
வேலூர், ஏப். 22- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜா (44). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சனிக்கிழமையன்று (ஏப்.22) ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிறை யிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர்.
ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
கிருஷ்ணகிரி, ஏப். 22- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அப்பிநாய்க்கன்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் அழகன் ஏரி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரத்து சீராக இருந்ததால் அதிகளவில் மீன்கள் கிடைத்தன. இந்நிலையில் வியாழக்கிழமை ஏரியில்மீன்கள், பாம்புகள், தவளைகள் செத்து மிதந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் யாராவது ஏரியில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் இந்த ஏரியில் அதிகளவில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கின்றன. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பரங்கிப்பேட்டையில் நவீன தகனமேடை அமைக்க வலியுறுத்தல்
சிதம்பரம், ஏப். 22- பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் நவீன தகனமேடை அமைக்கக் கோரி அனைத்து கட்சி சார்பில் மே 3ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச்செயலாளர் வேல்முருகன், வார்டு உறுப்பினர்கள் ஜெயந்தி ஜெய்சங்கர், அருள் முருகன், சங்கர், ராஜேஸ்வரி, பாமக நகரச் செயலாளர் செல்வபிரதிஷ், அண்ணா மலை, ஆனந்த், மதன் (விசிக), மாலிக் (காங்கிரஸ்), குமார் (தேமுதிக), இயற்கை ஆர்வலர்கள் கண்ணன், விமல், செல்வம், ஹாஜா மொதீன் (ஐக்கிய ஜமாத்), அலிக்கான் (தமுமுக), கொளஞ்சியப்பன் (விவசாயிகள் சங்கம், தனசேகரன் (சிஐடியு), ஹபிபுல்லா (சிறுபான்மை மக்கள் நலக்குழு) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பேரூ ராட்சியில் 2022 ஆம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு கடந்த 19.7.2022 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 1 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.கே.எம்.எஸ் என்ற தனியார் நிறு வனத்திற்கு டெண்டர் அளிக்கப்பட்டது. டெண்டர் எடுத்து 180 நாட்களுக்குள் பணி களை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும், இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பரங்கிப்பேட்டை பேரூ ராட்சிக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதியை வீணாக்காமல் உடனே வேலையை துவக்கக் கோரி வரும் மே 3ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யபட்டது.
வன்புணர்ச்சி வழக்கில் 3 பேர் கைது
விழுப்புரம், ஏப். 22- விக்கிரவாண்டி அருகே கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இரவு நடந்த மாணவி வன்புணர்ச்சி செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேர் சனிக்கிழமை (ஏப். 22) கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு 8 மணியளவில் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள கம்பியாம் புலியூர் ஏரிக்கரை அருகே தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென, தான் வைத்திருந்த கத்தியால் மாணவரை சரமாரியாக குத்தியதோடு கூச்சலிட முயன்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் கத்திமுனையில் அந்த மாணவியை வன்புணர்ச்சி செய்ததாகவும், பின்னர் அவர்களின் 2 செல்போன்கள், நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அடுத்த கோலியனூர் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்த கவியரசன், அபி (எ) அபினேஷ், அன்பு, ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி, ஏப். 22- கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டு கடவாத்து கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்ரா (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெண்கள் உட்பட 10 கொத்தடிமைகள் மீட்பு
கிருஷ்ணகிரி, ஏப். 22- கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்க ளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தகரத்தால் ஆன கொட்ட கைகளில் தங்க வைக்கப்பட்டு விருப்பத்திற்கு மாறாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா வுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் உடையாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார், வருவாய்த்துறை அதிகாரி கள் அங்கு சென்று விசாரணை நடத்தி னர். அதில் அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வர்கள் என்றும், கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்ததும், அவர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. 5 பெண்கள் உள்பட 10 பேரை அதிகாரிகள் மீட்டு, அவர்க ளது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். அதன்பேரில் காவல் துறை யினர் விசாரணை நடத்தி கொத்த டிமைகளாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தெலுங்கானா மாநிலம் வானபருதி மாவட்டம், எத்லா கிராமத்தை சேர்ந்த சீனி வாசன், கங்காதரன், ஷிதுளு மற்றும் தொழிலாளர்களை அழைத்து வந்த பொறுப்பாளர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரப்பா (58) ஆகிய 4 பேர் மீது கொத்தடிமைகள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.