ரூ.1.07 கோடியில் தார் சாலை ராணிப்பேட்டை, பிப். 8 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் கிராமம் முதல் முருங்கை வரை செல்லும் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பொது மக்கள் தொடர் கோரிக்கை எதிரொலியாக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1.07 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை தரமாகவும், விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர், அதிகாரிகளையும் வலியுறுத்தினார். இதில் சேந்தமங்கலம் கிளை செயலாளர் சம்பந்தன், ராமு, ரோஷன், கோகுல் ஆகியோர் உடனிருந்தனர்.