districts

img

என்எல்சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை விஷ்ணு பிரசாத் எம்.பி குற்றச்சாட்டு

கடலூர், நவ.5- என்எல்சி நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில் அவர் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது: ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள  என்எல்சி பொதுத்துறை நிறுவனம்  வீடு, நிலம், கொடுத்த மக்களை ஏமாற்றி வரு கிறது. 25 ஆயிரம் அதிகாரிகளையும், தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக செயல்பட்டது. ஆனால் தற்போது 10ஆயிரம் அதிகாரி கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உள்ள னர். அதிலும் 6 ஆயிரம் பேர் அதிகாரி களாக உள்ளனர். என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டமே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. என்எல்சியில் பணிபுரியும் தமிழ்நாடு சேர்ந்த அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கி உயர்  பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உடனடியாக வேலை கள் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. என்எல்சியில் (Strategic information cell) மூலோபாய தகவல் பிரிவு ஒன்று துவங்கப்பட்டு ஒரு வரை நியமனம் செய்துள்ளனர்.அவருக்கு லட்சக்கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாய நிலத்திற்கு ஒரு செண்ட்டுக்கு ரூ.1000  கூடுதலாக கேட்டால் கொடுப்பதில்லை.என்எல்சி நெய்வேலியில் பக்கவாட்டு நுழைவு(Lateral entry)முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இவர்களில் 90 விழுக்காட்டினர் வடமாநிலத்தவர்கள் தான். என்எல்சி விரும்பும் தேவையுள்ள வர்களை இணைக்கும் பக்கவாட்டு நுழைவு முறையை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் திலகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் ஏ.எல்.சி காம்ப்ளக்ஸ் வளாகத்தின் பின்புறம் திறக்கப்பட்டது.