மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ராயபுரத்தில் திங்களன்று (அக். 2) நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் எஸ்.பவானி, டி.வெங்கட், ஜுகைப், அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.