தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் டி.ஏ உயர்வு வழங்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கடலூர் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் எஸ்.கண்ணுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.பழனிவேல், ஏ.வரதராஜன், ஜி.பாஸ்கரன், எம்.முத்துக்குமரன், ஜி.பூங்குன்றன், கே.கலியபெருமாள் பங்கேற்றனர்.