districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மதுராந்தகம் சார்நிலை கருவூலம் எதிரே  வட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட தலைவர் பூங்குழலி, வட்டச் செயலாளர் சுதர்சன்,வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சரவணன் ஓய்வு பெற்ற அனைத்து துறை ஊழியர் சங்க வட்டத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் பேசினர்.