districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் இணைந்து திருவள்ளூர் மொண்டிமாநகரில் உலக புத்தக தினத்தை கொண்டாடியது. இந்த புத்தக கண்காட்சியை ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.தேவதாஸ் திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற சங்க நிர்வாகி பி.நடேசன்,  குமார், எஸ்.பார்த்திபன், எஸ்.குமார், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் டி.ஜெகன்நாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு, ஞாயிறு ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.வி.எல்லையன், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் செந்தில்வேலன், மகிமா பொன்மலர் (அறிவியல் இயக்கம்), சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.