சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன் தலைமையில் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர் அழகேசன், அசோகன், பச்சையப்பன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பலராமன், மாவட்டச் செயலாளர் டி.கே.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.