சென்னை, நவ.21- தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை திரு பெரும்புதூரில் உள்ள மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப் வென்ற ரேன்சை யெர்ஸ் அணிக்கு ரூபாய் 2 லட்சம் ரொக்கப்பரிசும், இரண்டாவது ரன்னர் அப் வென்ற மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ் அணிக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெய்ன்ட் இந்தியா நிறுவனத்தின் அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற வர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களை கவுர வித்தார். அண்ணாநகர் சைக்கிளிங் நிறுவனரும், மோட்டார் சைக்கிள் பந்தய வீரருமான சுதாகர், பேசுகையில், கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கபடிக்கு கபடி பிரிமியர் லீக், கால்பந்து போட்டிக்கு லீக் இருப்பதைபோல சைக்கிளிங்குக்கும் லீக் போட்டி நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.