தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில், சட்டப்படி 5 விழுக்காடு வீடுகளை வழங்க வேண்டும், சுய தொழில் புரிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நடைபாதை கடைகள் வைக்க அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.