districts

img

கடலூர் அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

கடலூர்,ஏப்.24- தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடைபெற்றது. இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் வரவேற்றார். குரலிசை ஆசிரியர் யோகலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பெரியார் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஜானகி ராஜா வாழ்த்துரை வழங்கினார். கலை மாமணி பானுமதி வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆண்டாங்கோயில் சுந்தர்ராஜன் குழுவின ரின் வாய்ப்பாட்டும் உத்திராபதி மற்றும் வாசுதேவன் குழுவினரின் மங்கள இசை கச்சேரியும் நடைபெற்றது. நிறைவாக  வயலின் ஆசிரியர் சரவணன் நன்றி கூறி னார்.