வேலூர், ஜன. 9 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மாணாக்கர் நல அலுவலகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம், வேளாண்மை துறை ஆகியவற்றின் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை விஐடி வேந்தர் கோ.விசுவ நாதன் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது, விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்கள், நாடுகள், மொழிகள் பேசுப வர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பொங்கல் விழா பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியா என்பது அனைவரும் சேர்ந்து வாழ்கின்ற ஒரு நாடாகும். உலகத்தில் 7100 மொழிகள் பேசப்படு கின்றன. உலகில் தமிழ், சமஸ்கிருதம் உள்பட 7 மொழிகள்தான் மூத்த மொழி கள். சமஸ்கிருதம் மாதிரி மற்ற பல மொழி கள் தற்போது வழக்கில் இல்லை. ஆனால் என்றும் மாறாமல் இன்றும் இளமையாக இருக்கின்ற ஒரே மொழி நம்முடைய தமிழ் மொழிதான். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த இலக்கண நூல் தொல்காப்பியம். முதல் இலக்கண நூல் நமக்கு சொந்தமான நூலாகும். 2100 ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய திருவள்ளுவர் வாழ்ந்து திருக்குறளை தந்துவிட்டு போனார். திருக்குறள் என்பது எல்லா மதத்தி னராலும், எல்லா நாட்டினராலும் எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நூலாகும். பைபிளுக்கு அடுத்து அதிக மாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்க ளில் திருக்குறள் ஒன்றாக இருக்கிறது. அந்த உலகப் பொதுமறை சொல்வது, நம்மில் பிறப்பிலே, வேறுபாடு ஏற்றத் தாழ்வு கிடையாது. அந்த நூலுக்கு நாம் சொந்தக்காரர்கள். காந்தியடிகள் எனக்கு அடுத்த பிறவி இருக்குமானால் நான் தமிழனாக பிறந்து தமிழிலேயே திருக்குறளை படிக்க வேண்டும் என்றார். அப்படிப்பட்ட திருக்குறளை நாம் எல்லோரும் படிக்க வேண்டும். நல்ல உழைப்பு வேண்டும். அப்படிப் பட்ட கல்வியும் கொடுத்து, உழைக்கின்ற ஒரு வாய்ப்பையும் தருகின்ற இடம் தான் விஐடி நீங்கள் எங்கே போனாலும் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். விழாவில் வேளாண்மை துறை சார்பில் 5 சிறிய கையேடுகளை வேந்தர் விசு வநாதன் வெளியிட வேளாண்மை இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார், செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் விஐடி துணைத் தலை வர் சேகர் விசுவநாதன், உதவி துணைத்தலை வர் காதம்பரி ச.விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.