districts

img

ரூ.7.64 கோடியில் கண்காணிப்பு கேமரா

சென்னை, பிப். 21 - பெருநகர சென்னை மாநகராட்சி யின் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொடர்பான 82 அறிவிப்பு களை மேயர் ஆர்.பிரியா வெளி யிட்டார். இதில் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: மாநகராட்சிக்கு சொந்தமான 419 பள்ளிகளில் எல் கே ஜி வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு தலா 2 ஜோடி சீருடை ரூ 8.50 கோடி  மதிப்பீட்டில் வழங்கப்படும். தேசிய மாணவர் படை(என்சிசி), சாரண, சாரணியர் இயக்கத்தில் (ஸ்கவுட் கைட்ஸ்) உள்ள மாணவர்களுக்கு 66 லட்சம் மதிப்பீட்டிலும் சீருடை கள் வழங்கப்படும். பள்ளி மாணாக் கர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை  வழங்கப்படும். பள்ளி இசைக்குழுவுக்கு  இசைக்கருவிகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி - 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3.59 கோடி மதிப்பீட்டில் முதல்  முறை யாக ஒரு ஜோடி ஷூ, 2 ஜோடி காலுறை வழங்கப்படும். 9-12ஆம் வகுப்பு பயிலும் திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து நேரடியாக, இணையதளம் வாயி லாக பயிற்சி அளிக்க ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.93 லட்சம் செலவில் தலா ஐந்து  பச்சை வண்ணப் பலகைகள் வழங் கப்படும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இசைக்குழு அமைக்க இசைக்கருவிகள் வழங்கப்படும். மகளிருக்கு மேம்பாட்டு பயிற்சி  ராயப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 வகுப்பறை கட்டிடங் கள் கட்டுவதோடு, மாணவர்களுக்கு மிதிவண்டி, சீருடை வழங்க ரூ3 கோடி செலவிடப்படும். 2 சமுதாய கல்லூரிகளில் தலா ரூ25 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ1.32 கோடி வழங்கப்படும். பள்ளிகளின் மேல் தளங்களில் எபாக்சி வாட்டர் புருபிங் தொழில்நுட்பத்தின் மூலம்  மறுசீரமைக்க ரூ.25 கோடி  செலவிடப்படும்.  255 பள்ளிகளில் தலா 4 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.7.64 கோடி செலவில் பொருத்தப் படும். 6-12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் வளர்இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச் சனைகளை தவிர்க்க 10 ஆலோ சகர்கள் நியமிக்கப்படுவார்கள்.

சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படும். மழலையர் மாணாக் கர்களுக்கு  தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை எளிதாகவும், மகிழ்வுடனும் கற்க ஏதுவாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும். மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா  மழலையர் வகுப்பில் இரண்டாம்  ஆண்டை (யுகேஜி) நிறைவு செய்த  குழந்தைகளுக்கு, வகுப்பை நிறைவு செய்ததையும், ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான முழு தகுதியைப் பெற்றமையும்   பாராட்டி  விழா நடத்தி “பட்டம்” வழங்கப் படும்.  மாணவர்கள் படைப்பாற்றல் தொடக்க, நடுநிலைப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின், தமிழ், ஆங்கில பாடத்தின் வாசிப்பு  திறன், எழுத்துத்திறனை மேம்படுத் தவும், அடிப்படை கணிதத் திறன்களை வளர்க்க ஏதுவாக  ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணாக்கர் களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படும். மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் பள்ளிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை காட்சிப்படுத்தி, ஆண்டுதோறும் பாராட்டு விழாக்கள்  நடத்தப்படும். குழந்தைகள் பாதுகாப்புக்குழு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர் களைத் தலைவராகக் கொண்டு ‘குழந்தைகள் பாதுகாப்பு குழு’  அமைக்கப்படும். மக்கும் மற்றும் மக்காத குப்பை  என தரம் பிரித்து அகற்றும் முறையை  பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படும். விரிவாக் கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சென்னைப் பள்ளிகளில் பாலின குழுக்கள் ஏற்படுத்தப்படும்.         இவ்வாறு அவர் கூறினார்.