சென்னை,அக்.18- சென்னை சூளைமேட்டில் வாடகைத் தாய் பண்ணைகள் செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவப் பணிகள் துறை அதிகாரிகள் நேரடியாக அந்த வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். 2 வீடுகளில் மொத்தம் 11 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கரு செலுத்தப்பட்டு கர்ப்பிணியானதும் இந்த வீடுகளில் அடைத்து வைத்து விடுகிறார்கள். பிரபலமான 2 மருத்துவமனைகளின் மூலம் வாடகைத் தாயாக இவர்கள் அமர்த்தப் பட்டு இருந்தனர். பெண்களிடம் நேரில் விசாரிக்க முயன்ற அதிகாரிகளை அந்த வீடு களுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சோதனைக்கு சென்ற வர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவ மனைக்கும் நேரில் சென்று இது தொடர்பாக விசாரித்தனர். அப்போது வாடகைத் தாய்மார்கள் பெயர் விபரம், யாருக்காக குழந்தை பெற்று தருகிறார்கள், உரிய விதி முறைகளை பின்பற்றியிருக்கிறார்களா? என்ற விபரங்களை கேட்டனர். ஆனால் விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அந்த 11 பெண்களையும் அங்கிருந்து அவசர அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றியது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் வாடகைத்தாய் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.