வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி 7 வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழனன்று (செப்.21) எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், எண்ணூர் அசோக் லேலண்ட் எம்ப்ளாயிஸ் யூனியன் செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் செந்தில், நிர்வாகிகள் மோகன கிருஷ்ணன், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.