districts

ராஜீவ்காந்தி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்ற பரிந்துரை

சென்னை, ஜூன் 11-

     சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தம் போக்குவரத்து நெரிசல் காரண மாக இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.  இந்நிலையில் சென்னை ஒருங்கி ணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பேருந்து நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையிலுள்ள நடை பாதையை சிட்கோ பேருந்து நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரயில்வே நடை பாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்திலுள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப் படவுள்ளது.  

   கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரி சலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரயில் நிலை யம் அருகில் ஒரு பேருந்து நிலை யம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையிலுள்ள 10 பேருந்து நிறுத்தங்களில் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலை யங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

   சில பேருந்து நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளதாகவும் அதில் சிலர் அமர்ந்து மது அருந்துவதாக புகார் எழுந்துள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.