திருவண்ணாமலை, டிச.28- தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி ரூ. 16 கோடியை பெற்று தரக்கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தரணி ஆலை 2 தலைவர் எஸ். பாண்டுரங்கன் தலைமை தாங்கி னார். மாநிலத் தலைவர் எஸ். வேல்மாறன் கோரிக்கையை வலி யுறுத்தி பேசினார். விவசாயிகள் சங்கத்தின் தலை வர்கள் பா. செல்வன், செயலாளர் கி. பாலமுருகன், டி .கே. வெங்கடேசன், எஸ்.பலராமன், உதயகுமார், சிஐடியு நிர்வாகி எம்.வீரபத்திரன், முன்னாள் தலைவர் சிவக்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், ஏகாம்பரம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.