திருவள்ளூர்,ஜன. 3- மீஞ்சூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகரிடம் குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என மாண வர்கள் புகார் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்ற னர். இந்த பள்ளியை பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் திங்களன்று (ஜன3) திடீர் ஆய்வு நடத்தி னார். அப்போது, கழிப்பறை கள் சுகாதாரமற்ற நிலை யில் இருந்துள்ளது தெரியவந்தது. சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் , விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை பள்ளியில் இல்லை என்ப தையும், மாணவர்கள் சட்ட மன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர். மேலும், மாணவர்க ளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு உட்பட்ட மலர் உடனிருந்த னர்.