districts

தெருநாய்கள் கணக்கெடுப்பு விரைவில் துவக்கம்

சென்னை, ஜூன் 14-

     சென்னையில் 4 முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறை  தெரு நாய்கள் கணக்கெடுக்கப்படுகின்றன. சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சென்னை நகரம் முழுவதும் 57,366 தெரு நாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளில் சென்னையில் தெரு  நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் மீண்டும் தெரு நாய்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறிய தாவது:- சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பை நடத்துவதற்காக மாநகராட்சி ஆணையருடன் கலந்தா லோசித்து விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு  சாரா நிறுவனங்கள் மற்றும் பல்வேறு விலங்கு உரிமை  அமைப்புகளின் ஆதரவுடன் விரைவில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தெரு நாய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த அவ்வப்போது இனக்கட்டுப்பாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் 15,755 நாய்களுக்கு இனக்கட்டுபாடு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையில் 10 விழுக்காடு தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.