districts

img

சாலையில் திரிந்த மாடுகள்: உரிமையாருக்கு அபராதம்

சென்னை,அக்.21-  சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த 244 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.4,88,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 12ம் தேதி முதல் 18 ம் தேதி வரை சுற்றித்திரிந்த 244 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உத்தரவை மீறினால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;