districts

img

4 தலைமுறைகளாக விவசாயம் செய்வோரை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் 4 தலைமுறைகளாக விவசாயம் செய்வோரை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் அந்த நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (அக்.21) திருநீர்மலையில் கோரிக்கை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமிநடராஜன், மத்தியக்குழு உறுப்பினர் அனு, மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.மோகன், செயலாளர் எம்.சந்திரன், சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர்.