சென்னை, ஏப். 11 - சட்ட விதிகளுக்கு புறம்பாக நடத்தப்பட உள்ள நகர விற்பனைக் கழு தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சென்னை மாநகர் சிறுகடை வியா பாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் 15 உறுப்பினர்களை கொண்ட நகர விற்பனைக்குழு (வெண்டிங் கமிட்டி) அமைக்கப்பட உள்ளது. இதில் 6 பேர் வியாபாரிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் ஏப்.27 நடைபெற உள்ளது. இதற்கு வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து, அடையாள அட்டை வழங்கிய பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று (ஏப்.11) கூட்டமைப்பு சார்பில் மூர்மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியாளர்க ளிடம் பேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், சாலை யோரா வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி, அடையாள அட்டை வழங்கிய பிறகே தேர்தலை நடத்த வேண்டும். இதற்கு மாறாக மாநகராட்சி செயல்படுகிறது. எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டு மென்று ஏப்.3 அன்று மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினோம். ஏப்.8ந் தேதி நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்திலும் வலியுறுத்தினோம். இருப்பினும் ஏப்.27 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 35 ஆயி ரத்து 588 வியாபாரிகள் உள்ள தாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஏப்.10 முதல் அடையாள அட்டை வழங்குவ தாக கூறினார்கள். பலப்பகுதிகளில் அடையாள அட்டை விநியோகம் செய்யப்படவில்லை; வியாபாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அத்தகை யோர் வாக்களிக்க முடியாது. ஒரு நகரத்தின் மக்கள் தொகை யில் 2.5 விழுக்காடு சாலையோர வியா பாரிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அதன்படி சென்னை யில் 2.50 லட்சம் வியாபாரிகள் இருக்க வேண்டும். ஆனால், 35 ஆயி ரம் பேர்தான் உள்ளனர். எனவே, மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பு சரி யானது அல்ல. சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகள் நடக்கின்றனர். எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும். நகர விற்பனை குழுவில் 15 பேரில் 6 பேர் வியாபாரிகள் இடம்பெற முடி யும். எனவே இதற்கான குழுவை 3ல் 2 பங்கு வியாபாரிகள், ஒரு பங்கு அதிகாரிகள் என மாற்றி அமைக்க வேண்டும் அல்லது டெல்லியில் உள்ளது போல் 30 பேர் கொண்ட விற்பனைக் குழுவாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், வியாபாரிகள் சங்க தென்சென்னை நிர்வாகி வி.தாமஸ் உள்ளிட்டோர் பேசினர்.