வேலூர், ஜூன் 9-
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்து வர்கள் மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து கதிர் ஆனந்த் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூரிலுள்ள முக்கிய மருத்துவமனை யாக இஎஸ்ஐ மருத்துவமனை திகழ்கிறது. தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக இயங்குகிறது. தற்போது ஒன்றிய அரசு மாநில அரசு புதிய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
அதாவது, இந்த மருத்துவமனையில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை செய்து கொடுப்பதற்காக குழு ஒன்று நிய மித்துள்ளனர். இந்த குழுவில் மக்களை உறுப்பினர் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மருத்துவர்கள் உறுப்பி னர்களாக கொண்டு இந்த குழு செயல் படும். மருத்துவமனை தொடர்பாக இனி மேற்கொள்ளப்படும் அனைத்து நட வடிக்கையும் இந்த குழுவின் ஒப்புதல் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் இங்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முக்கியமாக இடப்பற்றாக்குறை உள்ளது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது நிலம் தேர்வு செய்யும் பணி கள் நடக்கிறது. மாவட்ட ஆட்சியரும் அதற்கான நிலம் தருவதாக தெரி வித்துள்ளார்.
இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ மனைக்கான அனைத்து கட்டு மானத்திற் கான நிதியை தொகை ஒன்றிய அரசு தருவதாக தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக ஒன்றிய-மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.