districts

img

பொறியியல் கல்லூரிகள் பங்கேற்ற மாநில விளையாட்டு போட்டிகள்

சென்னை, நவ.3- பொறியியல்  கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இந்த விளையாட்டு போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து, கபாடி, கோ–கோ, எறிபந்து மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.  விளையாட்டு போட்டியை சிமாட்ஸ் பல்லைக்கழக நிறுவனரும், வேந்தருமான டாக்டர் என்.எம். வீரையன்  போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்களின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக சிமாட்ஸ் பொறியியல் பள்ளி மேற்கொள்ளும் இந்த முயற்சி சிறந்த ஒரு முயற்சியாகும். இதன் மூலம் உள்ளூர் மற்றும் மாநில அளவில் விளையாட்டு மீது அதிக ஆர்வம் உள்ள மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிமாட்ஸ் பொறியியல் பள்ளி இயக்குநர் ரம்யா தீபக் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.