districts

img

10ஆம் வகுப்பு தேர்வில் புனித பேட்ரிக் பள்ளி 99.59 விழுக்காடு தேர்ச்சி

புதுச்சேரி, மே 20-

   புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள புனிதபேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று முடிந்து வெளி யான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 246 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 99.59 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.

   500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்று  இலக்கியா என்ற மாணவி யும் ஈசாக் என்ற மாணவ னும் பள்ளியில் முதலிடம் பெற்றார். 490 மதிப்பெண் பெற்று மாணவி அனுஷ்ரி 2ம் இடத்தையும், 489 மதிப் பெண் பெற்று மாணவி குருப்ரியா 3ம் இடத்தையும் பெற்றனர். பள்ளியில் தேர்வு எழுதிய 246 மாணவர்களில் 197 மாணவர்கள் 75  விழுக்காட்டினருக்கு அதிக மான மதிப்பெண் பெற்ற சாதனை  புரிந்தனர். தமிழில் 3  மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். இந்தியில் 2 மாணவர்கள் 92 மதிப்பெண் பெற்றனர். பிரெஞ்சில் 3 மாணவர்கள் 98 மதிப்பெண் பெற்றனர்.  ஆங்கிலத்தில் 6 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர்.  கணிதத்தில் 10  மாணவர்கள் 100 மதிப் பெண் பெற்றனர். அறிவிய லில் 8 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.

   சமூக  அறிவியலில் 1 மாணவர்  100 மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த பள்ளி  மாணவர்களை  பள்ளி தாளா ளர் பிரடெரிக் ரெஜிஸ்,  மருத்துவ இயக்குநர் ஜீத்தா  பிரடெரிக், முதல்வர் அல் போன்ஸ் ஹில்டா, ஆலோ சனைக் குழு உறுப்பினர்கள், வகுப்பாசிரியர்கள் முத்து குமரன், ஆல்மா, பியுலா, செந்தமிழ் செல்வி, சோபியா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.