காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை,ஜன.9- காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். மழைக்காலத்தில் டெங்கு,சிக்குன் குனியா, இன்ஃப்ளூயன்ஸா, எலிக் காய்ச்சல், காலரா உட்பட பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என்ப தால் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை 10 வாரங்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக சுகாதாரத் துறை நடத்தியது. இந்த முகாம்களில் ஏராள மானோர் பங்கேற்று பயன் பெற்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்தின் கேட்ட போது, ``தமிழ்நாட்டில் தற்போது பருவகால தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் மிகவும் குறை வாகவே உள்ளன. தற்போதைய சூழலில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் மட்டும் வேகமாக பரவுகின்றன. அதற்கான தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன”என்றார். மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக காய்ச்சல் மற்றும் வேறு வகையான தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பாதிப்பு உள்ள பகுதி களில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை கள் மேற்கொள்ளப்படும்’ என்றும் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
‘சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா’
சென்னை,ஜன.9- இந்த ஆண்டின் ‘சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிகள் வரும் 13 ஆம் தொடங்கி 17 வரை சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதன் தொடக்க விழா தீவுத் திடலில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜக அரசுக்கு சாட்டையடி: கி.வீரமணி
சென்னை, ஜன.9- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்றம் அளித்த இரண்டு முக்கிய தீர்ப்புகள் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் சரியாக அமலாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த வையாகும். அதில் ஒன்று, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்பது காவி பாஜக ஆட்சிக்கு கிடைத்த சாட்டையடி ஆகும். இரண்டாவது,இ.டபிள்யு.எஸ். என்று கூறப்படும் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை அடியோடு தகர்ப்பாகும். தொடக்கத்திலிருந்தே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது; அது அரசமைப்புச் சட்டத்திற்கு, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு முடிவுக்கும், கருத்துக்கு எதிரானது என்பதை பலமுறை தெரிவித்தேன். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. மாநில அரசின் உரிமையில் குறுக்கிட முடியாது. மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெளிவாகக் கூறி, தள்ளுபடி செய்துவிட்டது! இட ஒதுக்கீடு என்பது மக்களை நேரடியாக ஆளும் ஆட்சி, மாநில அரசுகளின் ஆட்சிக்கு தான் உண்டு. எனவேதான், மாநில அரசு பட்டியலில் தனித்தனியே ஆங்காங்குள்ள நிலைமைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் கோவில் அறங்காவலர் தேர்தல்
விழுப்புரம்,ஜன.9- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்கா ளம்மன் கோவில் அறங்கா வலர் தேர்தலுக்கான தேர்தல் அங்காளம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு நடைபெற்று வருகிறது. இதற்கான அட்டவணையை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான தேர்தல் ஜன.24 அன்று நடை பெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜன.8 ஆம் தேதி தொடங்கியது. 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை மனு தாக்கல் செய்ய லாம். மனுக்கள் பரிசீலனை ஜன.11 நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற ஜன.12 கடைசியாகும். இறுதி வேட்பாளர் பட்டியல் ஜன.19 அன்று வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஜன. 24 அன்று காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடை பெறுகிறது. பதிவான வாக்கு கள் அனைத்தும் அன்றைய தினம் இரவு எண்ணி முடிக்கப்படுகிறது. இந்த தகவலை இந்து சமய அற நிலையத்துறை தெரிவித் திருக்கிறது.
சமூக தரவு பதிவு கணக்கெடுப்பு: ஆட்சியர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி ஜன.9- சமூக தரவு பதிவுக்காக கணக்கெடுக்க வரும் களப்பணி யாளர்களின் தகவல்களை தயக்கமின்றி முழுமையாக தெரிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கான சமூக தரவு தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாவட்டங்களில் சமூக தரவு பதிவுகள் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து நமது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக தரவு பதிவுகள் தொடங்கப் பட்டுள்ளது. இ கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணி யாளர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் தகவல் மேற்கொண்டு வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் விவரம் குறித்த கணக்கெடுப்பு பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியல் தகவல்கள் பதிவு செய்யப்படும் எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்ப உறுப்பினர்களும் தகவல்களை இக் கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.