districts

திருவண்ணாமலையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை,ஆக.3-

      திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆக.4  காலை 10.30 மணிக்கு கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார், குடும்ப அட்டைகள், மாற்றுச்சான்று  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண், இருப்பிடம், சாதி, வருமானச் சான்றுகள், கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண சான்று ஆகியவற்றின் நகல்களுடன் பெற்றோருடன் வரவேண்டும்.

     இந்த முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் கடன் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.