districts

ரயிலில் வெளிநாட்டு  மதுபாட்டில் கடத்தல்

சென்னை,ஏப்.2- ராயபுரம் பட்டேல் நகரில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இறக்குமதி செய்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. இந்த பார்சலை டெலி வரிக்கு எடுக்க வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்சிங் (58) என்பவரை கைது செய்தனர். அவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. மொத்தம் 87 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டது கைதான அஜய் சிங்கை வண்ணாரப்பேட்டை மது விலக்கு அமலாக்கப் பிரி வில் ரயில்வே காவலர்கள் ஒப்படைத்தனர்.

;