விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி பகுதியில் நகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உர மையம், திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கான புதிய இடம், ரூபாய் 268 கோடியில் திண்டிவனத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணி ஆகியவற்றை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மோகன் உடனிருந்தனர்.