தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் 200அடி சாலை மேம்பாலத்திற்கு கீழ் பராமரிப்பின்றி உள்ள துரைப்பாக்கம் ரேடியல் சாலையை சீர்படுத்தி, தார்ச்சாலை அமைக்கக் கோரி சனிக்கிழமையன்று (டிச.3) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். 24 வது வார்டு கிளைத் தலைவர் கமலேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜானகி, பல்லாவரம் பகுதிச் செயலாளர் சிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.