districts

பரங்கிப்பேட்டையில் சாலையை சீரமைக்க கையெழுத்து இயக்கம்

சிதம்பரம், டிச. 23- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பொன்னந்திட்டு பாலம் அருகே இருபுறமும் சாலை கள் சேதமடைந்து போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதை சரி செய்ய வலியுறுத்தி கட லோர மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.   இயக்கத்தின் பரங்கிப் பேட்டை ஒன்றிய செயலா ளர் சந்தானராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, ஆட்டோ சங்கத் தலைவர் விஜய், பேரூராட்சி மன்றம் சிபிஎம் உறுப்பினர் ராஜேஸ்வரி சிறுபான்மை தலைவர் ஹசன் முகமது உள்ளிட்ட இயக்கத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.